பழைய செந்தில்-கவுண்டமணி படங்கள் அதிகம் பார்த்திருந்தால் இந்த அண்ணே..
என்ற சொல் அச்சு பிறழாமல் செந்திலின் குரலில் உங்களுக்கு நினைவுக்கு
வரும்..
(வரவில்லை என்றால் விடுங்கள், 24 மணி நேரமும் இவர்களை
காட்டுவதற்காகவே ரெண்டு தொலைகாட்சிகள் இருக்கிறதே அவர்கள் காட்டுவார்கள்
பார்த்தது தெளிந்து கொள்ளுங்கள்.)
பெரும்பாலும் செந்தில் அண்ணே.. என்று ஆரம்பித்தால் எதாவது வில்லங்கமான கேள்வியில் தான் முடிப்பார்..
சொப்பன சுந்தரிய யார் வெச்சிருந்தாங்க?...
ஏன் முகத்தில இருக்கிற முடிய தாடின்னு சொல்றாங்க, முகமூடின்னு சொல்லலாமே?...
புல்- முழுப் புல்....
இந்த மாதிரி நிறைய..
அந்த அளவுக்கு நமக்கு திறமை இல்லன்னாலும் நிறைய விடை தெரியாத கேள்விகள் தின வாழ்க்கையில் வருகின்றன.
பெரும்பாலான வினாக்களுக்கு விடை கிடைத்தாலும் சிலவற்றுக்கு பதில் தெரிவதில்லை தெரிந்தாலும் புரிவதில்லை.
இன்றைய கேள்விகள் :
௧.மனிதன் தோன்றினானா? தோற்றுவிக்கப்பட்டனா?
௨.எல்லோருக்கும் பொதுவான தண்ணீரை "தன் நீர்" என்று அண்டை மாநிலத்தவர் உரிமை கொண்டாடுவது ஏன்?
௩.அரை மணி நேர செய்தியில் விளம்பரம் போக மீதமுள்ள இருபது நிமிடங்களையும் அரசியலும் அது சார்ந்தவர்களுமே வருவது ஏன்?
௪.சில கேள்விகளுக்கு விடை தெரிந்த போதிலும் அது அவர்களுக்கும் தெரிந்தும் மனம் மாறாமல் மழுப்புவது ஏன்?